ஹைதராபாத்தில் விடிய விடிய கனமழை - குழந்தை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை தொடங்கியது.

இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகரவாசிகள், குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

மாநகராட்சி ஊழியர்கள் இரவு முழுவதும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர் மழை காரணமாக ரஹ்மத் நகரில் ஒரு வீட்டின்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 மாத குழந்தைஉயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்