டெல்லியில் காஸிபூர் குப்பைக் குவிப்பு இடத்தில் குப்பைக் குவியலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர். 4 பேர் குப்பைக் குவியல் சரிவிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மழைகாரணமாக இந்தக் குப்பைக் குவியலின் ஒரு பகுதி சரிவடைந்ததையடுத்து அருகில் சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் கொண்ட்லி காலவாயில் விழுந்தனர். ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கால்வாயில் விழுந்தன.
“ராஜ்குமாரி (32), அபிஷேக் (22) ஆகியோர் பலியாகினர், 4 பேர் காப்பாற்றப்பட்டனர்” என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் குப்பை குவிப்பு இடம் கிழக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியின் கீழ் வருகிறது .
குப்பைக் குவியலின் ஒரு பகுதி சரிந்து அருகில் இருந்த கால்வாயில் விழ அதிலிருந்து நீர் தெறித்து சில வாகனங்களின் மீது விழ கால்வாயின் இன்னொரு பகுதியில் வாகனங்கள் விழுந்துள்ளன என்று மேயர் பகத் தெரிவித்தார்.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
29 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago