பாஜகவில் இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி உரிமம்

By எல்லுச்சாமி கார்த்திக்

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு கைத்துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இதனை டெல்லி போலீசார் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்திருந்தார்.

கடந்த 2022 மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரது கருத்திற்காக அந்த கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இருந்தாலும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் ஆங்காங்கே வெடித்தது. அதோடு சர்வதேச அளவில் இந்த விவகாரம் கவனம் பெற்றது.

தொடர்ந்து அவர் தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ட்விட்டரில் அறிக்கை மூலம் சொல்லி இருந்தார். அதோடு மத உணர்வுகளை புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அதில் அவர் சொல்லி இருந்தார்.

அவரது கருத்துக்கு கண்டனம் எழுந்ததோடு நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அவர் நாடி இருந்தார். அவரது கருத்தால் நாட்டில் அப்போது நிலவிய சூழல் காரணமாக அவரை வலிமையாக கண்டித்தது உச்ச நீதிமன்றம். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தனர்.

இந்தச் சூழலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி வேண்டி விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் இப்போது அவருக்கு அதற்கான லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி போலீசின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பின்புலம் என்ன?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்