பிஎஸ்எப் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சுட்டுக்கொலை

By ஐஏஎன்எஸ்

எல்லைப் பாதுகாப்புப் படையினர் திரிபுராவின் இந்தியா - வங்கதேச எல்லையில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அரேபர் ரஹ்மான் என்ற சந்தேக நபரைச் சுட்டுக்கொன்றனர்.

இதுகுறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் உத்தம்குமார் பவ்மிக் கூறும்போது, வெள்ளிக்கிழமை இரவு இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதியில் பலேர்தேபா கிராமத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பசுமாடுகளைச் சிலர் கடத்துவதாகத் தகவல் வெளியானது. உடனே கடத்தல்காரர் என சந்தேகிக்கப்பட்ட அரேபர் ரஹ்மான் என்ற 38 வயது நபரைச் சுட்டுக்கொன்றனர் என்றார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், எல்லைப் பாதுகாப்புப் படையின் சந்தேகங்களை இறந்தவரின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். கொல்லப்பட்டவர் ஓர் அப்பாவி என்று கூறியுள்ளனர். மேலும் துணை ராணுவப் படையினருக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

விளையாட்டு

51 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்