டெல்லியில் மாணவி மீது ஆசிட் வீச்சு: 2 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவி மீது மோட்டார் பைக்கில் வந்த இருவர் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆசிட்டை ஆன்லைன் வழியாக முக்கிய குற்றவாளி வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக 2 ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

ஆன்லைனில் ஆசிட் எளிதில் கிடைப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று கூறியுள்ள மகளிர் ஆணையம் டிசம்பர் 20-ம் தேதிக்குள் இரு நிறுவனங்களிடம் இருந்து விரிவான நடவடிக்கை அறிக்கையை கோரியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்