ஜமாத் இ-இஸ்லாமியின் ரூ.90 கோடி சொத்து பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் புலனாய்வு துறை (எஸ்ஐஏ) அதிகாரிகள் நேற்று கூறியதாவது. தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகள் மீது தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் இ-இஸ்லாமி அமைப்புக்குச் சொந்தமான 11 சொத்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்துக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் 2 பள்ளி கட்டடங்கள் உள்பட ஷோபியான் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான 9 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு எஸ்ஐஏ தெரிவித்துள்ளது. ஜமாத் இ-இஸ்லாமி என்பது ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அரசியல், மத அமைப்பாகும். தீவிரவாதத்தை ஆதரித்து வந்த தால் இந்த அமைப்பு 2019-ல் தடை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்