ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அட்டூழியம் - பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: 76-வது காலாட்படை தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் மக்களுக்கு எதிராக அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. இந்தியாவை குறி வைப்பதே தீவிரவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.

அரசியலைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசால் பாகுபாடு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ம் தேதி, இந்திய ராணுவம் சார்பில் காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டு இதே நாளில் இந்திய ராணுவத்தின் முதல் சீக்கியர் படைப்பரிவு, ஸ்ரீநகரில் உள்ள விமான தளத்தில் தரையிறங்கி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பாகிஸ்தான் படையினரை விரட்டியது. சுதந்திர இந்தியாவில் ராணுவம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

38 mins ago

ஜோதிடம்

13 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்