இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் இருந்து குல்லு என்ற இடத்துக்கு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நண்பகல் 12 மணியளவில், மாண்டி நகரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனி என்ற இடத்தில் பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பியாஸ் ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். விபத்தில் 18 பேர் இறந்தனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரும் மாண்டியில் உள்ள மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குஜராத்தில் 14 பேர் பலி
குஜராத்தில் மினி பஸ்ஸும் லாரியும் நேற்று முன்தினம் இரவு மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago