புதுடெல்லி: 6 மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று மேலும் கூறியுள்ளதாவது: பிஹாரின் மோகமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகள், மகாராஷ்டிராவில் (கிழக்கு) அந்தேரி, ஹரியாணாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உ.பி.யில் கோலா கோரக்நாத் மற்றும் ஒடிசாவில் தாம்நகர் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 6-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 6 மாநிலங்களில் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான விரிவான அறிவிக்கை அக்.7-ல் வெளியிடப்படும். இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
க்ரைம்
28 mins ago
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago