சகிப்புத்தன்மையற்ற சமூகம் ஏற்றம் காண முடியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் பேச்சில் இருந்து சில முக்கிய அம்சங்கள்:
* நாம் வாழும் சமூகத்தில் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக ஏற்றம் கண்டாலும் அது முழுமையான ஏற்றமாக இருக்காது.
* இங்கு, சமீபகாலமாகவே ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வேற்று மதத்தினரை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சாதி வேற்றுமையும் அதிகரித்து வருகிறது.
* நம் சமூகம் மனிதத்தன்மையாலும், சகிப்புத்தன்மையாலும் அல்லவா நிறைந்திருக்க வேண்டும்.
* நம் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமே அதன் பன்முகத் தன்மைதான். ஆனால், வேற்றுமைகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களால் எப்படி இத்தேசம் முன்னேறும். இத்தகைய சூழலில் நம் பொருளாதாரம் எப்படி ஏற்றம் காணும?
* கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவருகிறது. இதனால், மோதல்களும் அதிகரித்து வருகின்றன. இது ஒருவிதமான நம்பிக்கையற்ற சூழலை உருவாக்குகிறது.
* ஜனநாயகமே நமது பலம். நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம். இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே கொள்கை பேதங்கள் இருக்கலாம். ஆனால், மோதல்களைக் கடந்து நாம் சகிப்புத்தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே நமது நாடு ஒட்டுமொத்த வளார்ச்சி காணும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
சினிமா
25 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
13 hours ago
தமிழகம்
2 hours ago