மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

By பிடிஐ

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடி ஊழியர், ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அக விலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 50.68 லட்சம் ஊழியர்களும் 54.24 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இத னால் அரசுக்கு ஆண்டு தோறும் கூடுதலாக ரூ.5622.10 கோடி செல வாகும். தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறி விப்பை மத்திய அரசு வெளியிட் டுள்ளது. எனினும் இதுகுறித்து ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் குட்டி கூறியபோது, தற்போதைய விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஏழாவது ஊதிய கமிஷன் பரிந் துரைகள் அமல் செய்யப்பட்ட போது அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்