மதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும் என்று உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “முழு மதுவிலக்கு முடிவை உடனடியாக எடுப்பது சாத்தியமல்ல, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்கு அறிவுரை வழங்க முடியும்.
கரும்பு விவசாயிகளின் நலன், மதுக்கடைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் இது. எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
முழு மதுவிலக்கால் மாநிலத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பிறவற்றின் மூலம் ஈடுகட்ட முடியும் என்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு பதில் அளிக்குமாறு அகிலேஷ் யாதவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 mins ago
விளையாட்டு
58 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago