ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் 12 வயது சிறுமி உட்பட ஒரே குடும் பத்தை சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

ஆதிலாபாத் மாவட்டம், பைம்சா பகுதியை சேர்ந்தவர் சையத் கான் (55). நேற்று பயங்கர ஆயுதங் களுடன் இவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த சையத் கான், யூனஸ் கான் (35), அக்ரம் பீ (60), வஹீதா பேகம் (38), ஆயிஷா (12) ஆகிய 5 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை யில் சொத்து தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள் ளது. குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்