நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா - புதிதாக 3,712 பேருக்கு தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் புதிதாக 3,712 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தது. தினசரி தொற்று பாதிப்பு, 2 ஆயிரத்துக்கு கீழே குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2,745 ஆக இருந்த தினசரி பாதிப்பு, நேற்று 3 ஆயிரத்தை கடந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரஅமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3,712 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 2,745-ஐ விட 35.22 சதவீதம் அதிகம். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,64,544 ஆக உயர்ந்தது.

கரோனா தொற்றுக்கு கேரளாவில் 5 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த கரோனா உயிரிழப்பு 5,24,641 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சிகிச்சையில் இருந்து 2,584 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

23 mins ago

வணிகம்

37 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

50 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்