புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் புதிதாக 3,712 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தது. தினசரி தொற்று பாதிப்பு, 2 ஆயிரத்துக்கு கீழே குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2,745 ஆக இருந்த தினசரி பாதிப்பு, நேற்று 3 ஆயிரத்தை கடந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரஅமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3,712 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 2,745-ஐ விட 35.22 சதவீதம் அதிகம். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,64,544 ஆக உயர்ந்தது.
கரோனா தொற்றுக்கு கேரளாவில் 5 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த கரோனா உயிரிழப்பு 5,24,641 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சிகிச்சையில் இருந்து 2,584 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
21 mins ago
இந்தியா
23 mins ago
வணிகம்
37 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
50 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
4 hours ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago