சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 வயது வாலிபர் உட்பட 2 பேர் மாவோயிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நக்ஸல் பாதிப்பு மிகுந்த கொண்டேகான் மாவட்டத்தில், ஹரமண்ட்லா கிராமத்தில் உற வினர் வீட்டில் தங்கியிருந்த கான்ரு பட்டேல் (18) என்ற வாலிபரை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தாக்கியும், துப்பாக்கி யால் சுட்டும் படுகொலை செய்துள்ளது.
சம்பவ இடத்தில் மாவோயிஸ்டு களின் துண்டு பிரசுரங்களை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததால், வாலிபரை கொன்றதாக அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதேபோல், தான்டேவாடா மாவட்டத்தில், கிரண்டுல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோல்னார் கிராமத்தின் அருகே மலைப் பகுதியில் ஜோகா மாத்வி என்பவரின் சடலம் கண்டெடுக்கப் பட்டது.
இரு தினங்களுக்கு முன், அவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பஸ்தார் மாவட்டத்தில் காடிராஸ் மற்றும் தோங்பால் வனப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை யினருடன் போலீஸார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 12 நக்ஸலைட்டுகள் கைது செய்யப்பட்டதாக, மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இணைப்பிதழ்கள்
56 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
21 mins ago
இந்தியா
17 mins ago
க்ரைம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
உலகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
2 hours ago
உலகம்
2 hours ago