தோல்விகளைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி தேய்ந்து போன ‘சுயபரிசோதனை’ என்பதை மறந்து சீரிய செயல்திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் என்று அக்கட்சியின் சசி தரூர் கூறியுள்ளார்.
இது பற்றி சசி தரூர் கூறியதாவது:
மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய தலைமை மீதான தீர்ப்பல்ல, எப்போதும் உள்ளூர் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இளம் தலைவர்கள் அவசியம் தேவை என்பதை கேரள முடிவுகள் அறிவுறுத்துகிறது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் இளம் வயதினர், 30 வயதுகளில் உள்ளவர்கள். இது கட்சிக்கு ஒரு நல்ல அறிகுறி. அதாவது இளம் தலைமுறையினரிடத்தில் கட்சி செல்ல முடிந்துள்ளதைக் காட்டுகிறது. இளம் தலைமுறையினருடன் கேரளாவில் காங்கிரஸ் தன்னை மறுகண்டுபிடிப்புச் செய்து கொண்டுள்ளது.
ஆகவே அனுபவம் ஒட்டுமொத்தமாக தேவையில்லை என்று நான் கூறவில்லை, அனுபவமும், இளம் திறமைகளும் உடைய கலவையே இனி எதிர்கால அரசியலுக்குப் பயன்படும்.
ஆகவே காங்கிரஸ் கட்சியில் இளம் வயதினருக்கு தலைமைத்துவமும் பொறுப்பும் அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இவ்வாறு கூறினார் சசி தரூர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago