கொல்லம் விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 10-ம் தேதியன்று கொல்லம் மாவட்டம் புட்டிங்காலில் உள்ள கோயிலில் நடந்த பட்டாசு போட்டியின்போது ஏற்பட்ட விபத்தின்போது 113 பேர் பலியாகினர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, "கொல்லம் விபத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். காலதாமதமின்றி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
கோயில்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படும். பாரம்பரிய முறையை கைவிடக் கூடாது என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் பரவூர் சம்பவம் போன்று மற்றுமொரு சம்பவம் இனிமேல் நடக்கவே கூடாது என வலியுறுத்துகின்றனர். இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்து அரசு முடிவு எடுக்கும்" என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
42 mins ago
ஜோதிடம்
45 mins ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago