கோவை காதல் ஜோடி திருப்பதியில் தற்கொலை: திருமணத்துக்குப் பின் விபரீதம்

By செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்த காதல் ஜோடி, திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட பிறகு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து திருமலை போலீஸார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டம் முத்துகுப்பு பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் குமாரும் (24)சத்யவாணியும் (20) காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரி வித்தனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி வீட்டை விட்டு வெளி யேறிய இந்த ஜோடி, 23-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயி லில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருமலை யில் அறை எடுத்து தங்கினர்.

கடந்த 3 நாட்களாக அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தேவஸ்தான ஊழியர் கள் இது குறித்து திருமலை போலீஸாருக்கு தகவல் கொடுத் தனர். இதையடுத்து நேற்று மதியம் போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அந்த அறையில் இருந்து 3 பக்க கடிதத்தில், எங்கள் காதலை பிரிக்க நினைத்ததால் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்தது. இது குறித்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்