ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர் பாக இத்தாலி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அந்நிறுவன முன்னாள் நிர்வாக அதிகாரி புரூனோ ஸ்பானோவுக்கும் கியூசெப்பி ஓர்ஸிக்கும் அண்மையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக வட்டாரங் கள் கூறியதாவது: இத்தாலி நீதி மன்ற தீர்ப்பில் ரூ.250 கோடிக்கு லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டுள் ளது. ஒப்பந்தத்தை பெற காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரிடம் பேரம் நடத்தப்பட்டதும் தெளிவாகி யுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 193, 204-ல் சோனியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லெகி நேற்று அவை யில் வலியுறுத்தினார். இதே விவ காரம் தொடர்பாக மாநிலங்களவை யில் விவாதம் நடத்த கோரி பாஜக எம்.பி.க்கள் சுப்பிரமணியன் சுவாமி, பூபேந்திர யாதவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்