ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்றதற்காக கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்களை, சிரியா இந்தியாவுக்கு அனுப்பியது. அவர்களை பத்திரமாக பெற்றுக் கொண்டதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நான்கு இந்தியர்களை சிரியா கைது செய்தது. அவர்கள் தற்போது இந்திய அரசாங்கத்தால் பத்திரமாக திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “நான்கு இந்தியர்களும் பாதுகாப்பாக திரும்பப் பெறப்பட்டனர். அருண் குமார் சைனி, சர்வ்ஜித் சிங், குல்தீப் சிங், ஜோகா சிங் ஆகிய நால்வரையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். அவர்கள் சிரியாவிலிருந்து இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்த அதிகாரிகளை பாராட்டுகிறேன். இந்தியாவுக்கு வருகைபுரிந்த சிரிய துணைப் பிரதமரிடம் இவர்களை விடுவிக்கும்படி கோரியிருந்தேன். சிரியாவுக்கு நன்றி” என சுஷ்மா தொடர்பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago