பிரான்சில் இருந்து அடுத்த வாரம் கடைசியாக 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரான்சில் இருந்து கடைசி கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன.

பிரான்சிடம் இருந்து ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 2020 ஜூலையில் 5 விமானங்கள் இந்தியா வந்தன. தொடர்ந்து பல கட்டங்களாக ரஃபேல் விமானங்கள் வந்தன. இதுவரை 33 விமானங்கள் வந்துள்ளன. கடைசி கட்டமாக மீதியுள்ள 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் மத்தியில் இந்தியாவுக்கு வருகின்றன. இந்தத் தகவலை விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்ததுபோல இம்முறையும் பயணத்தின்போது இந்த விமானங்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு நேரடியாக பிரான்சில் இருந்து இந்தியா வரும். வானில் இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணையை இடைமறித்து தாக்குதல் போன்ற திறன்களுடன் எதிரிகளை அடையாளம் காணும் ரேடார் எச்சரிக்கைக் கருவியும் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சுற்றுலா

11 hours ago

மேலும்