புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பேருந்து, ரயில், விமானம் உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வசதியாக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, பொது முடக்ககட்டுப்பாடுகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. எனினும், சர்வதேச விமான சேவை மட்டும் இன்னமும் தொடங்கப்படாமல் இருந்தது. அதனை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென ஒமைக்ரான் பரவியதால் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது.
கரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
க்ரைம்
26 mins ago
விளையாட்டு
55 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago