தேர்வுக்கு தயாராவோம் 2022 நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்வுக்கு தயாராவோம் 2022 குறித்து ட்வீட் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

நமது ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சவால்கள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும் இது அவருக்கு வாய்ப்பளிக்கிறது என்று அவர் கூறினார்.

“பரீட்சைகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன, ஆகையால் ‘தேர்வுக்கு தயாராவோம் 2022’ நிகழ்ச்சியும் நெருங்குகிறது. மன அழுத்தமில்லாத தேர்வுகளைப் பற்றி பேசுவோம், மீண்டும் ஒருமுறை நமது துணிச்சலான தேர்வு வீரர்கள் #ExamWarriors, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்போம். இந்த ஆண்டிற்கான ‘தேர்வுக்கு தயாராவோம் 2022’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில், ‘பரிக்ஷா பே சர்ச்சா’ ஒரு அருமையான கற்றல் அனுபவம். நமது ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சவால்கள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைகிறது. கல்வி உலகில் மாறிவரும் நடைமுறைகளை கண்டறியவும் இது வாய்ப்பளிக்கிறது. #PPC2022.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சினிமா

6 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்