மேம்பால விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவில் கடந்த வியாழக்கிழமை மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக மேம்பால கட்டு மானப் பணியில் ஈடுபட்டுள்ள ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவ பகுதியில் மீட்புப் பணிகள் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியபோது, இடிபாடுகளை மிகவும் கவனமாக அகற்றுகிறோம். சிறிய தவறு நேரிட்டால்கூட பாலத்தின் இதர பகுதிகள் இடிந்து விழக்கூடும் என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந் துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்