பேஸ்புக் மூலம் மனைவியை விற்க முயன்ற ஆசிரியர் கைது

By செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் திலீப் மாலி (30). கல்லூரி பேராசிரியரான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

கடந்த 6-ம் தேதி பேஸ்புக்கில் இந்தி மொழியில் மாலி விளம்பரம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கடனை அடைப்பதற்காக தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையை விற்க தயாராக இருப்பதாகவும், ரூ. 1 லட்சம் கொடுத்து அவர்களை வாங்க விரும்புவோர் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலியின் மனைவி உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மாலியின் சார்பில் அவரது மாணவரான கமலேஷ் மெஹ்ரா என்பவர் தான் பேஸ்புக்கில் இந்த விளம்பரத்தை வெளியிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்