மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் திலீப் மாலி (30). கல்லூரி பேராசிரியரான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த 6-ம் தேதி பேஸ்புக்கில் இந்தி மொழியில் மாலி விளம்பரம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கடனை அடைப்பதற்காக தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையை விற்க தயாராக இருப்பதாகவும், ரூ. 1 லட்சம் கொடுத்து அவர்களை வாங்க விரும்புவோர் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலியின் மனைவி உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மாலியின் சார்பில் அவரது மாணவரான கமலேஷ் மெஹ்ரா என்பவர் தான் பேஸ்புக்கில் இந்த விளம்பரத்தை வெளியிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
10 hours ago