இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 538 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 249 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 10,302. இதில் கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,080.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,18,901.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 12,510.
இதுவரை குணமடைந்தோர்: 3,39,34,547.
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.31% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 249 . கேரளாவில் மட்டும் 40 பேர் இறந்தனர்.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,65,911..
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,18,443 . இது கடந்த 534 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.
வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.93% ஆக உள்ளது. இது கடந்த 59 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.08% ஆக உள்ளது. இது கடந்த 49 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.
பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,16,18,27,385 கோடி. (116 கோடி)
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 mins ago
தமிழகம்
10 mins ago
விளையாட்டு
29 mins ago
சினிமா
30 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
51 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago