வட தமிழகத்தில் நாளை  மிக அதிகனமழை வரை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளது
கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 5.8 கி.மீ. வரை நீடிக்கும் சுழற்சி.

இது கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு விரிகுடாவை அடைய வாய்ப்புள்ளது. நாளை, 18ம் தேதிக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் - வட தமிழகக் கடலோரப்பகுதியை வந்தடையும்.

மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கோவா-தெற்கே கிழக்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது. மகாராஷ்டிரா கடற்கரையொட்டி சுழற்சி 5.8 கிமீ வரை நீண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடல் கோவா-தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை பரவியுள்ளது.

மழை எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா மற்றும் கேரளா, மாஹே பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும்.

நவம்பர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் வட தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புண்டு.

18-ம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திராவின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில்
அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

காற்று எச்சரிக்கை

நவம்பர் 18-ம் தேதி மற்றும் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசும் 40-50 கிமீ வேகத்தில், சில சமயங்களில் 60 கிமீ வரை பலத்த காற்று வீசும்.

வரும் 19-ம் தேதி: தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு


மங்களபுரம் (நாமக்கல்) 11 செ.மீ., கெங்கவல்லி (சேலம்) 8 செ.மீ., காட்பாடி (வேலுார்), அரூர் (தர்மபுரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), பந்தலுார் (நீலகிரி) தலா 7 செ.மீ., செட்டிகுளம் (பெரம்பலுார்), செங்கம் (திருவண்ணாமலை), திருப்புவனம் (சிவகங்கை), மேட்டூர் (சேலம்) தலா 6 செ.மீ. பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்