லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப் பெரிய அளவிலான காதி தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசிய கொடிக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப் பெரிய அளவிலான காதி தேசியக் கொடி (225 அடி நீளமும், 150 அடி அகலமும்) பறக்க விடப்பட்டுள்ளது. காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
விழா காலங்களில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“காதி மீது விரிவான ஆர்வம் கொண்டிருந்த மதிப்புக்குரிய பாபுவுக்கு ஒப்பற்ற புகழஞ்சலியாக இது உள்ளது.
இந்த விழாக்காலம் காதி மற்றும் கைவினைப் பொருட்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், தற்சார்பு இந்தியாவை கட்டமைக்கும் தீர்மானத்தை வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 mins ago
ஜோதிடம்
18 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago