பிஹாரில் இளைஞர் வெறிச் செயல்: வெற்றிலை பாக்கு துப்பிய வியாபாரி சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

பிஹார் மாநிலம் சிவான் மாவட்டம் புரானி குய்லா என்ற இடத்தில் இஷான் மாலிக் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சாலையோரம் ரெடிமேட் துணிகளை வியாபாரம் செய்து வந்த இவர், உ.பி. மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுள்ள மாலிக், வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது வெற்றிலையை வாயில் போட்டு குதப்பியவாறே மாடியில் இருந்து ஜன்னல் வழியேயாக துப்பினார்.

அப்போது, எதேச்சையாக கீழே சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த கோலு மியான் என்ற இளைஞர் மீது இஷான் மாலிக் துப்பிய வெற்றிலை பாக்கு எச்சில் விழுந்தது. இதனால், கடும் கோபமடைந்த இளைஞர் கோலு மியான் கோபத்துடன் மாடிக்கு சென்று, மாலிக்கை தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இஷான் மாலிக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர். தப்பிச் சென்ற மியானை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

தமிழகம்

6 mins ago

க்ரைம்

50 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

55 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்