திருப்பதி ஏழுமலையானை நவம்பர், டிசம்பர் மாதங்களில் தரிசிக்கநேற்று காலை ரூ. 300 ஆன்லைன்சிறப்பு தரிசன டிக்கெட்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஒரு மணி நேரத்திலேயே 7.32 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான ரூ.300 ஆன்லைன் டிக்கெட்களை நேற்று காலை 9 மணியளவில் தேவஸ்தானம் தனது இணையத்தில் வெளியிட்டது. உடனே நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கினர். இதில் சிலருக்கு பணம் செலுத்துவதற்கான ஓடிபி எண்ணை பதிவு செய்யும்போது மீண்டும் முயற்சிக்கவும் என வந்ததாக பலரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ள மொத்தம் 61 நாட்களில் ஒரு நாளுக்கு 12 ஆயிரம் டிக்கெட்கள்வீதம் ஒரே மணி நேரத்தில் 7.32 லட்சம் டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டன.
இன்று, நவம்பர் மாதத்துக்கான 30 நாட்களுக்கு மட்டும், தினமும்10 ஆயிரம் இலவச டிக்கெட்கள் வீதம் 3 லட்சம் டிக்கெட்கள் காலை 9 மணிக்கு தேவஸ்தானம் தனது இணையத்தில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago