இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட்-19 தடுப்பூசிகள் எண்ணிக்கை 100.59 கோடியைக் கடந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 61,27,277 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 100.59 கோடியைக் (1,00,59,04,580) கடந்தது. 99,59,884 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,641 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,35,14,449 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.16 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு ஆகும்.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 117 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. 232 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து தற்போது 1,75,745 ஆக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு. நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.51 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13,24,263 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 59.70 கோடி கோவிட் பரிசோதனைகள் (59,70,66,481) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 119 நாட்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.31 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று உறுதி தற்போது விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 136 நாட்களாக 5 சதவீதத்திற்குக் கீழே 53 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
க்ரைம்
10 mins ago
விளையாட்டு
39 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago