இந்தியாவில் கரோனா தொற்று 18,454: குணமடைந்தோர் விகிதம் 98.15%

By செய்திப்பிரிவு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,454 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,78,831 ஆகக் குறைந்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 98.15% ஆக உள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகுஇதுவே அதிகமான அளவாகும் .

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 18,454.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 34,127,450

தினசரி பாதிப்பு விகிதம் (1.48 சதவீதம்) கடந்த 52 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை குணமடைந்தோர்: 3,34,95,808

குணமடைந்தோர் விகிதம் 98.15%

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 17,561

கரோனா உயிரிழப்புகள்: 452,844.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 160

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,78,831

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 100 கோடி .

நேற்று மட்டும் 33,06,472 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

இதுவரை மொத்தம் 59.57 கோடி கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

17 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்