இந்தியாவில் 231 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த கரோனா பாதிப்பு: 13,058 பேருக்கு தொற்று; பலி 164

By ஏஎன்ஐ

இந்தியாவில் புதிதாக மேலும் 13,058 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 231 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 13,058. இதில் கேரளாவில் மட்டும் 6,676 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,40,94,373.

இதுவரை குணமடைந்தோர்: 3,34,58,801.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 19,470.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 164. இதில் கேரளாவில் 60 பேர் உயிரிழப்பு.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,52,454.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,83,118. இது கடந்த 227 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 98,67,69,411 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.14% ஆக உள்ளது. சிகிச்சையில் இருப்போர் விகிதமும் 0.54% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் 2020க்குப் பின்னர் மிகக் குறைவான விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 1.36% ஆக உள்ளது. கடந்த 116 நாட்களாகவே பாசிடிவிட்டி ரேட் 3%க்கும் கீழ் உள்ளது. பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு. தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.11% ஆக உள்ளது. இதுவும் கடந்த 50 நாட்களாக 50%க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்