கோவிட்-19 தடுப்பூசி: எண்ணிக்கை 97.79 கோடியைக் கடந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட்-19 தடுப்பூசிகள் எண்ணிக்கை 97.79 கோடியைக் கடந்துள்ளது

மதத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,05,162 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 97.79 கோடியைக் (97,79,47,783) கடந்தது. 96,88,300 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,582 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,34,39,331 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.12 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 113 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 230 நாட்களில் குறைவாகும்.

நாட்டில் கோவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,89,694; 221 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கோவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.56 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,89,493 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 59.19 கோடி கோவிட் பரிசோதனைகள் (58,98,35,258) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 115 நாட்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.37 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று உறுதி தற்போது விகிதம் 1.37 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 132 நாட்களாக 5 சதவீதத்திற்குக் கீழே 49 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்