இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 260 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 28 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.
இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 16ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் 260 பேர் உயிரிழந்ததில் 120 பேர் கேரளாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 3 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 351 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.77 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 260 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 46 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை ஏறக்குறைய 85 கோடியே 60 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 68.42 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
24 mins ago
க்ரைம்
30 mins ago
க்ரைம்
39 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago