தேசிய தொலைமருத்துவச் சேவை இ-சஞ்சீவனி: 1.2 கோடி மருத்துவ ஆலோசனைகள்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட தேசிய தொலைமருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி மூலம்
1.2 கோடி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செல்பேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் இ-சஞ்சீவனி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் புற நோயாளிகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


தேசிய தொலைமருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி, 1.2 கோடி ஆலோசனைகளை வழங்கி நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் மாபெரும் தொலை மருத்துவச் சேவையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 90,000 பேருக்கு சேவை அளிப்பதன் வாயிலாக நோயாளிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இ-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் சுமார் 67,00,000 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் இந்தச் சேவை அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் நிலவும் மின்னணு சுகாதார இடைவெளியை இ-சஞ்சீவனி தேசிய தொலை மருத்துவச் சேவை நீக்குகிறது.

இந்தியாவில் மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலை மருத்துவ ஆலோசனைகளில் (12033498) முதல் 10 இடங்களை வகிக்கும் மாநிலங்களின் விவரங்கள் வருமாறு:

ஆந்திரப்பிரதேசம் (37,04,258), கர்நாடகா (22,57,994), தமிழ்நாடு (15,62,156), உத்தரப்பிரதேசம் (13,28,889), குஜராத் (4,60,326), மத்தியப் பிரதேசம் (4,28,544), பிஹார் (4,04,345), மகாராஷ்டிரா (3,78,912), மேற்கு வங்கம் (2,74,344) மற்றும் கேரளா (2,60,654) ஆகியவை ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்