சாட்சியாக ஆஜராக ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியாக ஆ.ராசா ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியாக ஆஜராக தனக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று ஆ.ராசா மனு செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, ராசா ஆஜராகி தனது தரப்பை விளக்கலாம் என்று அனுமதி அளித்தார்.

இதனையடுத்து ராசாவோ அல்லது அவரது பிரதிநிதியோ ஜுலை மாதம் 1ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெஹூரா, யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்த்ரா ஆகியோரும் தங்கள் தரப்பு சாட்சியங்களாக ஆஜராக விரும்புவோர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

இவர்களும் ஆஜராகி சாட்சியளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்