அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் வெளியிட்டார். அதேசமயத்தில் மேற்குவங்கத்தில் நடந்த இஸ்கான் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) சுவாமி பிரபுபாதா நிறுவினார். உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பி வரும் இஸ்கான், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர இலக்கிய நூல்களை 89 மொழிகளில் அமைப்பு மொழிபெயர்த்துள்ளது.
வேத இலக்கிய நூல்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.சுவாமி பிரபுபாதா சுமார் 100 கோயில்களை நிறுவியுள்ளதுடன், உலகிற்கு பக்தி பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது 125 -வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக பிரபுபாதா உருவம் பொறிக்கப்பட்ட ரூ. 125 நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதேசமயத்தில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற இஸ்கான் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பிரபுபாதாவின் தாமரை பாதங்களை அவர் திறந்து வைத்தார். பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி பங்கேற்ற இஸ்கான் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago