இந்தியாவில் கரோனா தடுப்பூசி: எண்ணிக்கை 52 கோடியை கடந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி மொத்த எண்ணிக்கை இன்று காலை 52 கோடியைக் கடந்தது

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 51.90 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 59,57,616 முகாம்களில் 51,90,80,524 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 41,38,646 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பின்னர் இன்று காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 52 கோடியை கடந்துள்ளது.

நம் நாட்டில், இதுவரை மொத்தம் 3,12,20,981 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,013 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விகிதம் 97.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 45 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,86,351. ஆக உள்ளது. கடந்த 140 நாட்களில், இது மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.21 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 17,77,962 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 48,50,56,507 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.16 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.

தொடர்ந்து 65 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 16 நாட்களாக இந்த எண்ணிக்கை மூன்று சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்