இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக அதிகரித்துள்ளது. புதிதாக 41 ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 2,224 பேர் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அதாவது தொற்று அதிகரித்துள்ளது. கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.35 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 507 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 165 பேர் மகாராஷ்டிராவிலும், 105 பேர் கேரளாவிலும் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 18 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 18 ஆயிரத்து 439 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 712 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 41.78 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
56 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago