பிரதமர் மோடி, அன்பாக தனது மகனின் காதைப் பிடித்து இழுத்த துடன் ‘நல்ல பையன்’ என்று கூறிய தாக இந்தி நடிகர் அக் ஷய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், “பிரதமர் மோடி, எனது மகன் ஆரவின் காதை செல்லமாக பிடித்து இழுத்து, நல்ல பையன் என்று கூறி னார். இது என் வாழ்வில் பெருமை யான தருணம் ஆகும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட் டினம் கடற்கரை பகுதியில் நடை பெற்று வரும் சர்வதேச கடற்படை விழாவின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நடைபெற்ற சாகசங் களை பிரதமர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக் ஷய் குமார், அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா, மகன் ஆரவ் ஆகியோரும் பங்கேற்றனர். அப் போதுதான் பிரதமர் மோடி ஆரவின் காதைப் பிடித்து செல்லமாக இழுத்துள்ளார்.
ஆரவுக்கு 13 வயதாகிறது. தற் காப்பு கலையில் ஆர்வமிக்க இவர், கராத்தே சாம்பியன் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள் ளார். அனைத்து இந்திய குடோ தேசிய சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள் ளார். அக் ஷய் குமார், ட்விங்கிள் தம்பதிக்கு நிதாரா என்ற மகளும் உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
13 mins ago
வணிகம்
57 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
சினிமா
1 hour ago