தமிழக வெள்ள நிவாரணம்: அன்புமணி ரூ.1 கோடி நிதி

By செய்திப்பிரிவு

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) இருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

தர்மபுரி மக்களவை தொகுதி உறுப்பினரான இவர், கடந்த 17-ம் தேதி இதற்கான ஒப்புதலை, மக்களவையின் எம்.பி.எல்.ஏ.டி.எஸ் தலைவருக்கு எழுத்து மூலம் அனுப்பி இருந்தார். இதன் நகலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இயக்குநருக்கு நேற்று அனுப்பினார்.

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நாட்டின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உதவி செய்யலாம் என இத்துறை சார்பில் கடந்த 4-ம் தேதி அறிவிக்கை வெளியானது.

இதற்கு இரு அவைகளின் எம்.பி.க்களில் அன்புமணியுடன் சேர்த்து நேற்றுவரை 10 பேர் மட்டுமே சம்மதம் அனுப்பி யுள்ளதாக தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

10 mins ago

தமிழகம்

4 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

37 mins ago

ஓடிடி களம்

54 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்