நாட்டில் 12 வாரங்களுக்குப் பிறகு கரோனா உயிரிழப்பு 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந் திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா பரவத் தொடங்கியது. கடந்த செப் டம்பரில் உச்சத்தை தொட்டு, நாள்தோறும் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாகக் குறைந்தது. கடந்த ஜனவரியில் தினசரி தொற்று 10 ஆயிரமாக இருந்தது.
தற்போதைய நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று 2 ஆயிரத்துக்கும் கீழாக உள்ளது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கத்தில் மட்டும் நாள்தோறும் 10 ஆயிரத் துக்கும் அதிகமாக வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடு களால் இந்த மாநிலங்களிலும் வைரஸ் பரவல் கணிசமாக குறைந்து வருகிறது.
மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் 1.27 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இது கடந்த 54 நாட்களில் குறை வான தினசரி தொற்றாகும். கரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒரே நாளில் 2.55 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கடந்த மே மாத மத்தியில் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 90 லட்சமாக இருந்தது. தற்போது 18.95 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
தினசரி பாதிப்பு கணிசமாகக் குறைந்தா லும் உயிரிழப்பு சற்று அதிகமாக பதிவாகி வந்தது. இந்நிலையில் 12 வாரங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் முதல்முறையாக தினசரி கரோனா உயிரிழப்பு 3 ஆயிரத்துக் கும் கீழ் குறைந்தது. 2-வது நாளாக நேற்றும் 3 ஆயிரத்துக்கும் கீழாக பதிவானது. மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் நேற்று 2,795 பேர் உயிரிழந் துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 3.31 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம் கரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக நாள்தோறும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
11 mins ago
விளையாட்டு
27 mins ago
வாழ்வியல்
36 mins ago
ஓடிடி களம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago