பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராம்தேவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார்.

எனினும் உத்தராகண்ட் மாநில இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐஎம்ஏ), ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ம் தேதி (இன்று) கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர் சங்க கூட்டமைப்பு (எப்ஓஆர்டிஏ) முடிவு செய்துள்ளது.

டாக்டர்கள் குறித்தும், அலோபதி மருத்துவம் குறித்து ஒழுங்கீனமான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவைக் கண்டித்து ஜூன் 1-ம் தேதி கருப்பு தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தில் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை நடைபெறும். அவர் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்