மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கியது மத்திய அரசு: கரோனா தடுப்புக்கு 50 சதவீதம் செலவிட அனுமதி

By செய்திப்பிரிவு

அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.23 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

நாட்டில் புயல், வெள்ளம் போன்ற பேரி டர்களின்போது, மக்களின் வாழ்வா தாரத்துக்கும், சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகையில் 50 சதவீதத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிட அனுமதி வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2021–22-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிதிக்கு ரூ.23 ஆயிரம் கோடியை மத்திய அரசு நேற்று ஒதுக்கியது. கடந்த ஆண்டை போலவே, இந்தத் தொகையில் 50 சதவீதத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக் கிய பணத்தை ஒடிசா மாநிலம் திறம்பட செல விட்டுள்ளது. அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலம், கடலோர பகுதிகளில் ‘புயல் பாதுகாப்பு மையங்களை’யும் உள்கட்டமைப்புகளையும் கட்டி முடித் துள்ளது. தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அந்த மையங்களை கரோனா சிகிச்சை முகாம்களாகவும் ஒடிசா அரசு மாற்றி உள்ளது.

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் கருவிகள் வாங்க கர்நாடக மாநில அரசு கடந்த வாரம் ரூ.15 கோடியை ஒதுக்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

36 mins ago

உலகம்

50 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்