மகாராஷ்டிராவை ஒட்டி அமைந்துள்ள கோவா மாநிலத்திலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 74 நோயாளிகள் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியில் இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்குள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் ஆக்சிஜன் பற்றாக் குறை காரணமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை 26, புதன்கிழமை 20, வியாழக்கிழமை 15, வெள்ளிக்கிழமை 13 பேர் என 4 நாட்களில் 74 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பதாகவும் அதை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வ ஜித் ராணே தெரிவித்துள்ளார். நோயாளிகள் நிரம்பி வழிவதால் கோவா மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி கள் தரையில் படுக்க வைக்கப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
47 mins ago
ஜோதிடம்
50 mins ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago