கரோனா தொற்றில் இறந்த ஆதரவற்ற உடல்களுக்கு சொந்த செலவில் தகனம்: திருப்பதி இஸ்லாமிய குழுவினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

By என்.மகேஷ்குமார்

கரோனா தொற்றால் மரண மடைந்தவர்களை கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகளாலும் நெருங்க முடிவதில்லை. நோய்த் தொற்று அபாயத்தால் இறந்தவர் களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க அனுமதிக்கின்றனர்.

இப்படியிருக்கையில், திருப்பதியில் கோவிட்-19 இஸ்லா மிய முற்போக்கு குழு ஒராண்டாக கரோனா தொற்றால் இறந்த ஆதரவற்றோரின் உடல்களை மயானத்துக்கு கொண்டு சென்று, அவரவர் சம்பிரதாயப்படி அடக்கம் அல்லது தகனம் செய்து வருகிறது. இப்பணியை தங்கள் சொந்த செலவில் இக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இதை அறிந்த திருப்பதி நகர்ப்புற காவல் கண்காணிப்பாளர் வெங்கட அப்பல நாயுடு, இஸ்லாமிய முற்போக்கு குழுவினரை நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அப்பல நாயுடு பேசும்போது, “கரோனாவால் உயிரிழந்தவர்களை தொடும் அளவிற்கு கூட நாம் இல்லை. ஆனால், இவற்றை எல்லாம் மீறி, ஒருமித்த மனிதாபிமான உள்ளங்கள் ஒன்றுசேர்ந்து, மதங்களை கடந்து கரோனா சடலங்களை தொட்டு, தூக்கி சடங்குகள் நடத்துகிறார்கள் என்றால், இதுபோன்றவர்களின் மூலமாக நான் கடவுளை பார்க்கிறேன்” என்றார். நிகழ்ச்சியில் குழு தலைவர் ஷேக் இமாம் சாஹிப், கவுரவத் தலைவர் எஸ்.கே.பாபு உள்ளிட்டோரும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

இந்தியா

41 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்