ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும்: தெலங்கானா அரசு

By செய்திப்பிரிவு

ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வதாரத்தைப் பறிக்கும் என்று தெலங்கானா அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நாளுக்கு நாள் கரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. வார இறுதியில் ஊரடங்கை விதிப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தெலங்கானா அரசின் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “நிலைமை முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஊரடங்கை விதித்தால் கரோனா எண்ணிக்கை குறைவாகும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. தேவைப்பட்டால் பரிசீலனை செய்யலாம். ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வதாரத்தைப் பறிக்கும்” என்றார்.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தற்போது கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்