கோவாக்சின் தடுப்பூசியை ஏற்றிச்சென்ற லாரியை மத்திய பிரதேசத்தில் நிறுத்திவிட்டு காணாமல் போய் உள்ளார் ஓட்டுநர்.
மே 1-ம் தேதி முதல் 18 முதல் 44 வயதுக்குட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் சில மாநிலங்களில் மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கியது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டம் கரேலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு லாரி கேட்பாரற்று கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் லாரியை சோதனையிட்டதில், ரூ.8 கோடி மதிப்பிலான 2.4 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நரசிங்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விபுல் ஸ்ரீவாஸ்தவா கூறும்போது,“கோவாக்சின் தடுப்பூசிகளை ஏற்றிய லாரி ஒன்று ஹைதராபாத்திலிருந்து ஹரியாணாவின் கர்னால் நகருக்கு சென்றுள்ளது. ஆனால் ஓட்டுநர் இந்த லாரியை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு தலைமறைவாகி உள்ளார். அதேநேரம் லாரியில் இருந்த மருந்துகள் குளிரூட்டியிலேயே பத்திரமாக உள்ளன. இந்த லாரியை ஓட்டிவந்த விகாஸ் மிஸ்ராவை அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். ஆனால் 12 மணி நேரமாக செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சைபர் போலீஸாரின் உதவியுடன் செல்போனின் இருப்பிடத்தைக் கண்டறிந்தோம். ஆனால் அங்குள்ள புதரில் செல்போன் மட்டுமே இருந்தது. ஓட்டுநரைக் காணவில்லை.
இதனிடையே, லாரி உரிமையாளர் வேறு ஒரு ஒட்டுநரை அனுப்பிவைத்தார். அவர் அந்த லாரியை கர்னால் நகருக்கு ஒட்டிச் சென்றார். காணாமல் போன ஓட்டுநர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
இந்தியா
54 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago