பஞ்சாப் முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்கள் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணும் வரை டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்துவதை நிறுத்தக்கோரி பஞ் சாப் முதல்வர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி யின் எல்லைப் பகுதிகளில் விவ சாயிகள் கடந்த 5 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனிடையே, டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் கத்ராவுக்கு பஞ்சாப் மாநிலம் வழியே செல்லும் வகையில் டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக பஞ்சாபில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேளாண் சட்டங் கள் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணும் வரை டெல்லி - கத்ரா விரைவு நெடுஞ்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வீட்டை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பஞ்சாபின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பாட்டியாலாவில் உள்ள முதல்வர் அம்ரீந்தர் சிங் வீட்டை நோக்கி டிராக்டர்களில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்ற விவசாயிகள், முதல்வர் வீட்டுக்கு செல்லும் சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடு பட்ட விவசாயிகள் முகக் கவசம் அணியவோ சமூக இடைவெளியை பின்பற்றவோ இல்லை.

பாட்டியாலா நகர போலீஸ் சூப் பிரண்டென்ட் வருண் சர்மா கூறும் போது, ‘‘போராட்டக் காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. நிலைமை சீரானதும் சட்டப்படி செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார். மேலும், பிரச்சினைக்கு தீர்வு கண்டபின் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடை அதிகரிக்கவும் விவ சாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்